இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
திமுக தலைவர் கருணாநிதியை அனைவரும் அறிவார்கள். ஆனால் ஒரு காலத்தில் காமெடியில் கொடி கட்டி பறந்த நடிகர் ஏ. கருணாநிதி பற்றி இன்றைய தலைமுறைக்கு அவ்வளவாக தெரியாது. இரண்டு கருணாநிதிக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவருமே உயரம் குறைவானவர்கள். எம்ஜிஆரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள். இருவருமே திருவாரூரைச் சேர்ந்தவர்கள்.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து 1948ம் ஆண்டில் வெளிவந்த “ஆதித்தன் கனவு” என்ற படத்தில் ஏ.கருணாநிதி அறிமுகமானார். இதைத் தொடர்ந்து திகம்பர சாமியார், பொன்முடி, தேவகி, கல்யாணி, வளையாபதி என மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் நடித்து புகழ்பெற்றார். வீரபாண்டிய கட்டபொம்மன், மாங்கல்யம், ஆதித்தன் கனவு, பாலும் பழமும், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி. உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். குறிப்பாக காமெடி நடிகை டி.பி முத்துலட்சுமியின் ஜோடியாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
அந்த காலத்திலேயே ஏ.கருணாநிதி சென்னை தியாகராய நகரில், “மாமியா உணவகம்” என்ற பெயரில் ஒரு அசைவ உணவகம் நடத்தி வந்தார். இங்கிருந்து வெளிநாடுகளுக்குக் கூட ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அவரது உணவகம் பெயர் பெற்றிருந்தது. இதற்கு காரணம் ஏ.கருணாநிதி அடிப்படையில் ஒரு சமையல் கலைஞர்.
1923ல் திருவாரூரில் பிறந்த இவர் 58வது வயதில் காச நோயால் காலமானார்.