இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'தங்கலான்'. இப்படம் இந்த வாரம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், அவருடைய அப்பாவும் வாங்கிய கடன் தொகை பாக்கி காரணமாக 'தங்கலான்' படத்திற்கு ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்ற பைனான்சியரிடம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் பத்து கோடி கடன் வாங்கியுள்ளார்கள்.
பைனான்சியர் தரப்பில் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்குப்பின்னும் அவர்கள் பணத்தைத் திருப்பித் தராமல் இருந்திருக்கின்றனர். அதனால் அவர்கள் மீது திவாலானவர்கள் என அறிவிக்க வேண்டும் என சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று இடைக்காலத் தீர்ப்பு வந்துள்ளது. அதன்படி ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் 'தங்கலான்' வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடி, 'கங்குவா' வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கார்த்திகேயன் அடங்கி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் 1 கோடி டெபாசிட் செய்தால் மட்டுமே 'தங்கலான்' படம் ஆகஸ்ட் 15ல் வெளியாகும். வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 14ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது.