2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' |

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'தங்கலான்'. இப்படம் இந்த வாரம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், அவருடைய அப்பாவும் வாங்கிய கடன் தொகை பாக்கி காரணமாக 'தங்கலான்' படத்திற்கு ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்ற பைனான்சியரிடம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் பத்து கோடி கடன் வாங்கியுள்ளார்கள்.
பைனான்சியர் தரப்பில் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்குப்பின்னும் அவர்கள் பணத்தைத் திருப்பித் தராமல் இருந்திருக்கின்றனர். அதனால் அவர்கள் மீது திவாலானவர்கள் என அறிவிக்க வேண்டும் என சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று இடைக்காலத் தீர்ப்பு வந்துள்ளது. அதன்படி ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் 'தங்கலான்' வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடி, 'கங்குவா' வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கார்த்திகேயன் அடங்கி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் 1 கோடி டெபாசிட் செய்தால் மட்டுமே 'தங்கலான்' படம் ஆகஸ்ட் 15ல் வெளியாகும். வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 14ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது.