இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை விஜய நிர்மலா. 30க்கும் மேற்பட்ட படங்களையும் இயக்கியுள்ளார். அவருக்கும், அவருடைய முதல் கணவர் கிருஷ்ணமூர்த்திக்கும் பிறந்தவர் தெலுங்கு நடிகர் நரேஷ். விஜய நிர்மலா பின்னர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவை மணந்து கொண்டார். கிருஷ்ணாவிற்கு அதற்கு முன்பாகவே இந்திரா தேவி என்பவருடன் திருமணம் நடைபெற்றுவிட்டது. அவர்களது மகன்தான் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு.
விஜய நிர்மலாவின் மகன் நரேஷ் திரையுலகத்தில் அறிமுகமாகி 50 வருடங்களாகிறது. அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் என்ற விதத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்கும். நரேஷ் நான்கவதாக திருமணம் செய்து கொண்டவர் கன்னட நடிகை பவித்ர லோகேஷ்.
திரையுலகில் தன்னுடைய 50வது வருடத்தைக் கொண்டாடும் விதத்தில் சில்கூர் என்ற கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சிறப்பு விருந்து ஒன்றை நடத்தினார். அதில் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், நடிகை பூனம் தில்லான், தமிழ் நடிகைகள் ஜெயப்பிரதா, மேனகா, சுஹாசினி, குஷ்பு மற்றும் தெலுங்குத் திரையுலகத்தின் சினிமா பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
அதோடு “விஜயகிருஷ்ணா மந்திர் மற்றும் கட்டமனேனி இந்திரா தேவி ஸ்பூர்த்தி வனம்” என்ற பூங்காவையும் திறந்தார் நரேஷ். அந்தப் பூங்காவில் நடிகர் கிருஷ்ணா பற்றிய திரைப்பட நூலகம், மியூசியம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.