தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
எதிர்பார்த்த படங்கள் எதிர்பாராத ஏமாற்றத்தைத் தருவதால் சினிமா ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. சில வாரங்கள் முன்பு வரை ஒரு புதிய படம் அதுவும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம் வந்தால் முன்பதிவுகள் அமோகமாக இருக்கும். படம் வெளியான நாள் வெள்ளிக்கிழமையாக இருந்தால் அதற்கடுத்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களிலும் குறிப்பிடத்தக்க முன்பதிவுகள் இருக்கும். டாப் நடிகர்களின் படங்களுக்கு ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேல் முன்பதிவுகள் நடக்கும்.
ஆனால், சமீபத்திய பெரிய படம் ஒன்று ரசிகர்களை மிகவும் ஏமாற்றியதால் ரசிகர்களும் தற்போது 'உஷார்' ஆகிவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாளை ஆகஸ்ட் 15ல் வெளியாக உள்ள 'தங்கலான், டிமான்ட்டி காலனி 2, ரகு தாத்தா' ஆகிய படங்களின் முன்பதிவுகளைப் பார்க்கும் போது அது உங்களுக்கும் புரியும். நாளை ஒரு நாளில் மட்டும் 'தங்கலான், டிமான்ட்டி காலனி 2' ஆகிய படங்களுக்கு குறிப்பிடத்தக்க முன்பதிவுகள் நடந்துள்ளது. அதற்கடுத்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மிக மிகக் குறைந்த அளவிலான முன்பதிவுகளே நடந்துள்ளன.
நாளை இப்படங்கள் வெளியான பின் படம் எப்படியிருக்கிறது என்ற கருத்துக்கள் வந்த பிறகு பார்த்துக் கொள்வோம் என ரசிகர்கள் தயங்குவது தெரிகிறது. படம் நன்றாக இருந்தால் தியேட்டர்கள் பக்கம் போவோம், இல்லை என்று வந்தால் நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் பார்த்துக் கொள்வோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.