இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
எதிர்பார்த்த படங்கள் எதிர்பாராத ஏமாற்றத்தைத் தருவதால் சினிமா ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. சில வாரங்கள் முன்பு வரை ஒரு புதிய படம் அதுவும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம் வந்தால் முன்பதிவுகள் அமோகமாக இருக்கும். படம் வெளியான நாள் வெள்ளிக்கிழமையாக இருந்தால் அதற்கடுத்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களிலும் குறிப்பிடத்தக்க முன்பதிவுகள் இருக்கும். டாப் நடிகர்களின் படங்களுக்கு ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேல் முன்பதிவுகள் நடக்கும்.
ஆனால், சமீபத்திய பெரிய படம் ஒன்று ரசிகர்களை மிகவும் ஏமாற்றியதால் ரசிகர்களும் தற்போது 'உஷார்' ஆகிவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாளை ஆகஸ்ட் 15ல் வெளியாக உள்ள 'தங்கலான், டிமான்ட்டி காலனி 2, ரகு தாத்தா' ஆகிய படங்களின் முன்பதிவுகளைப் பார்க்கும் போது அது உங்களுக்கும் புரியும். நாளை ஒரு நாளில் மட்டும் 'தங்கலான், டிமான்ட்டி காலனி 2' ஆகிய படங்களுக்கு குறிப்பிடத்தக்க முன்பதிவுகள் நடந்துள்ளது. அதற்கடுத்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மிக மிகக் குறைந்த அளவிலான முன்பதிவுகளே நடந்துள்ளன.
நாளை இப்படங்கள் வெளியான பின் படம் எப்படியிருக்கிறது என்ற கருத்துக்கள் வந்த பிறகு பார்த்துக் கொள்வோம் என ரசிகர்கள் தயங்குவது தெரிகிறது. படம் நன்றாக இருந்தால் தியேட்டர்கள் பக்கம் போவோம், இல்லை என்று வந்தால் நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் பார்த்துக் கொள்வோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.