படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'கோட்'. விஜய் அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் விஜய்யுடன் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, அர்ஜூன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் இசை அமைத்துள்ளார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. செப்டம்பர் 5ம் தேதி படம் வெளிவருகிறது.
இந்த நிலையில் படத்தின் கதை பற்றி வெங்கட் பிரபு வெளிப்படையாக பேசி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்திய ராணுவத்தின் உளவு அமைப்பான 'ரா' வின் துணை அமைப்பு 'சாட்ஸ்', அதாவது சிறப்பு தீவிரவாத எதிர்ப்பு படை. இந்த அமைப்பு ரா அமைப்போடு இணைந்து பணியாற்றும்.
இந்த அமைப்பில் பணியாற்றிய ஒரு குழு ஒரு காலத்தில் செய்த ஒரு விஷயம் தற்போது அவர்களுக்கு பிரச்னையாக வந்து நிற்கிறது. அதை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை. பரபரப்பான ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. ஒரு பெஸ்டிவல் மூடில் படம் இருக்கும், வழக்கமான விஜய்யை வேறு மாதிரி ரசித்து பார்க்கிற மாதிரி இருக்கும்.
இவ்வாறு கூறியுள்ளார் வெங்கட் பிரபு.