ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியில் பிரபலமாகி விட்டார் நடிகை ராஷ்மிகா. தற்போது தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் குபேரா, ஹிந்தியில் ஜாவா, சிக்கந்தர் போன்ற படங்களில் நடிக்த்து வருகிறார். இவர் கூறுகையில், ‛‛சினிமாவிற்கு ஏற்ற முகம் இல்லை என கூறி ஆரம்பத்தில் பலரும் என்னை நிராகரித்தார்கள். ஆடிஷன் போய்விட்டு வீட்டிற்கு வந்தாலே கண்ணீருடன் தான் வருவேன். கிட்டத்தட்ட 25 படங்கள் வரை நிராகரிக்கப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்தேன். கஷ்டப்பட்டு ஒரு படத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. மூன்று மாதங்கள் பயிற்சி நடந்தது. பின்னர் அந்த படமும் நின்றுவிட்டது. பிறகு சரியான வாய்ப்புகளை பயன்படுத்தி இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை'' என்கிறார்.