மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும், ரஜினிகாந்தும் 25 படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள். ரஜினிகாந்த் கமர்ஷியல் ஹீரோவாக உருவாவதற்கு எஸ்.பி.முத்துராமன் பெரிய காரணமாக இருந்தார். ஒரு நாள் எஸ்.பி.முத்துராமனை ரஜினி அழைத்து “என்னுடைய வளர்ச்சிக்கு பெரிய துணையா இருந்தீங்க. நான் பொருளாதாரத்துல பெரிய அளவிற்கு முன்னுக்கு வந்து விட்டேன். ஆனால் நீங்க இன்னும் அப்படியேதான் இருக்கீங்க உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு ஆசைப்படுறேன். என்ன வேணுமோ கேளுங்க” என்றார்.
அதற்கு எஸ்.பி.முத்துராமன் “என்னோட முதல் படத்துலேருந்து கடைசி படம் வரைக்கும் என்னோடு ஒரே டீம்தான் வேலை செய்றாங்க. என்னை மாதிரிதான் அவுங்களும் இருக்காங்க. அப்படி நீங்க ஏதாவது செய்றதாக இருந்தா என்னோட டீமுக்கே செய்யணும்” என்றார். அதை ஏற்றுக் கொண்ட ரஜினி, எஸ்.பி.முத்துராமன் குழுவிற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த படம்தான் 'பாண்டியன்'.
இந்த படத்தின் லாபம், எஸ்.பி.முத்துராமனின் குழுவினருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் இதனால் சொந்த வீடு, அடிப்படை வாழ்வாதாரம் கிடைத்தது.