ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்க இருந்த வாடிவாசல் படம் தொடங்க இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதோடு இந்த படத்தின் வி.எப்.எக்ஸ் வேலைகள் வெளிநாட்டில் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென அப்படத்தின் வேலைகள் கைவிடப்பட்டு வெற்றிமாறனும், சூர்யாவும் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்கள்.
ஒரு கட்டத்தில் வாடிவாசல் படத்தில் தனுஷ் நடிக்க போவதாகவும் செய்திகள் வந்தன. என்றாலும் அது குறித்து படத்தை தயாரிக்கும் எஸ். தாணுவிடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படியான நிலையில், சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார் வெற்றிமாறன். அந்த விழாவுக்கு தயாரிப்பாளர் எஸ்.தாணுவும் வந்திருந்தார். அப்போது பேசிய வெற்றிமாறன், ‛ரொம்ப நாளாவே வாடிவாசல் வருது வருதுன்னு சொல்லிக் கொண்டிருக்கிறோம். கூடிய சீக்கிரமே படத்தை ஸ்டார்ட் பண்ணி விடுவோம்' என்று கூறினார். இதன் மூலம் வாடிவாசல் கைவிடப்படவில்லை. விரைவில் தொடங்கப்படும் என்பது உறுதியாகி இருக்கிறது.