ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சென்னை: சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, மிகவும் நலமாக இருக்கிறார் என டாக்டர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
பழம் பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். அதில், பல ஹிட் பாடல்களும் அடங்கும். சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருதையும் பெற்றுள்ளார். பழம்பெரும் நடிகைகளான சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி உள்ளிட்ட நடிகைகளின் படங்களுக்கு இவரின் குரலில் பாடிய பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. அந்த அளவிற்கு தனது மெல்லிய குரல்களால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் பி.சுசீலா.
கடந்த ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடிகாணிக்கை செலுத்தியபோது, நாராயண மந்திரம் என்ற பக்தி பாடலை மூச்சு இறைக்க பாடிய வீடியோ வைரலானது. சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி
பி.சுசீலா, மிகவும் நலமாக இருக்கிறார் என டாக்டர்கள் தகவல் தெரிவித்து
உள்ளனர்.