ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், சூர்யா, பாபி தியோல், திஷா பதானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. சரித்திரம் கலந்த பேன்டஸி படமான இப்படத்தின் வெளியீடு அக்டோபர் 10ம் தேதி என்று கடந்த ஜூன் மாதம் 27ம் தேதியே அறிவித்துவிட்டார்கள்.
இந்நிலையில் தசெ ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா டகுபட்டி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்துள்ள 'வேட்டையன்' படத்தை அக்டோபர் 10ம் தேதி வெளியிடுகிறோம் என இன்று அறிவித்துள்ளார்கள்.
ஒரேநாளில் இரண்டு பெரிய படங்கள் வெளியாவது குறித்து சமூக வலைத்தளங்களில் பலவிதமான கருத்துக்கள் பதியப்பட்டு வருகிறது. ரஜினி ரசிகர்களும், சூர்யா ரசிகர்களும் அதற்குள் சண்டையை ஆரம்பித்து விட்டார்கள். 'வேட்டையன்' முன் யாரும் போட்டியிட முடியாது என ரஜினி ரசிகர்களும், 'கங்குவா' படம் இந்திய சினிமாவின் பிரம்மாண்டமான படம் என சூர்யா ரசிகர்களும் ஏட்டிக்குப் போட்டியாக சண்டை போட்டு வருகிறார்கள்.