ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் |
'கன்னட கானகுயில்' என்று அந்த மாநில மக்களால் இப்போதும் போற்றப்படுகிறவர் அஸ்வத்தமா. அவர் நடித்தது 3 படங்கள்தான். 1935ல் ராஜா சந்திரசேகர் இயக்கி, குப்பி வீரண்ணாவின் தயாரிப்பில் வெளியான 'சாதரமே' என்ற கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.
1937ம் ஆண்டில் தியாகராஜ பாகவதரின் 'சிந்தாமணி' படத்தில் சிந்தாமணி பாத்திரத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் ஓராண்டு காலம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. அதன்பிறகு 'சாந்த சக்குபாய்' படத்தில் நடித்தார். 3 படங்களுமே வெள்ளி விழா படங்கள். 3 படங்களிலும் டைட்டில் கேரக்டரில் நடித்தார். 3 படங்கள் நடித்த நிலையில் காசநோயால் பாதிக்கப்பட்டு காலமானார்.
பெங்களூருவில் பிறந்த அஸ்வத்தமா 1934ம் ஆண்டில் முகம்மது பீரின் “மீனலோசனி நாடக சபாவில்” இணைந்து நாடக நடிகையாக அறிமுகமானார். பின்னர் பாடகி ஆனார். பிரபல ரிக்கார்டிங் நிறுவனங்கள் இவரது இசை தட்டுகளை போட்டி போட்டு வெளியிட்டன. சினிமாவில் அறிமுகமான பிறகு சினிமாவிலும் பாடினார்.
'சிந்தாமணி' படம் இலங்கையில் வெளியானபோது அதனை 100 முறைக்கு மேல் பார்த்த ரசிகர் ஒருவர், அஸ்வத்தமாவை நேரில் சந்திக்க கள்ளத் தோணி மூலம் இந்தியா வந்து, பின்னர் பெங்களூர் சென்று அவரை சந்திக்க முடியாமலேயே கடிதம் எழுதிவைத்து விட்டு பெங்களூரு தெருவில் செத்துக் கிடந்திருக்கிறார்.