ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

'கன்னட கானகுயில்' என்று அந்த மாநில மக்களால் இப்போதும் போற்றப்படுகிறவர் அஸ்வத்தமா. அவர் நடித்தது 3 படங்கள்தான். 1935ல் ராஜா சந்திரசேகர் இயக்கி, குப்பி வீரண்ணாவின் தயாரிப்பில் வெளியான 'சாதரமே' என்ற கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.
1937ம் ஆண்டில் தியாகராஜ பாகவதரின் 'சிந்தாமணி' படத்தில் சிந்தாமணி பாத்திரத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் ஓராண்டு காலம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. அதன்பிறகு 'சாந்த சக்குபாய்' படத்தில் நடித்தார். 3 படங்களுமே வெள்ளி விழா படங்கள். 3 படங்களிலும் டைட்டில் கேரக்டரில் நடித்தார். 3 படங்கள் நடித்த நிலையில் காசநோயால் பாதிக்கப்பட்டு காலமானார்.
பெங்களூருவில் பிறந்த அஸ்வத்தமா 1934ம் ஆண்டில் முகம்மது பீரின் “மீனலோசனி நாடக சபாவில்” இணைந்து நாடக நடிகையாக அறிமுகமானார். பின்னர் பாடகி ஆனார். பிரபல ரிக்கார்டிங் நிறுவனங்கள் இவரது இசை தட்டுகளை போட்டி போட்டு வெளியிட்டன. சினிமாவில் அறிமுகமான பிறகு சினிமாவிலும் பாடினார்.
'சிந்தாமணி' படம் இலங்கையில் வெளியானபோது அதனை 100 முறைக்கு மேல் பார்த்த ரசிகர் ஒருவர், அஸ்வத்தமாவை நேரில் சந்திக்க கள்ளத் தோணி மூலம் இந்தியா வந்து, பின்னர் பெங்களூர் சென்று அவரை சந்திக்க முடியாமலேயே கடிதம் எழுதிவைத்து விட்டு பெங்களூரு தெருவில் செத்துக் கிடந்திருக்கிறார்.