ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் சில தெலுங்குப் படங்களும், ஹிந்தியில் பான் இந்தியா படமான 'சாவா' படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால், அன்றைய தினம் 'புஷ்பா 2' வெளியாக வாய்ப்பில்லை, எனவேதான் மற்ற படங்களின் அறிவிப்பு வெளியாகி வருகிறது என்று டோலிவுட்டில் சொன்னார்கள்.
இதனிடையே, 'மாருதி நகர் சுப்பிரமணியம்' என்ற படத்தின் நிகழ்ச்சியில் இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜூன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சுகுமார், “ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க நாங்கள் இடைவிடாமல் உழைத்து வருகிறோம். சில காட்சிகளை எடுக்க அதிக நேரமாகிறது. அதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை, அதனால்தான் தாமதம் ஏற்படுகிறது. அல்லு அர்ஜூனின் நடிப்பும், படமும் சிறப்பாக இருக்கும்” என்று பேசியுள்ளார். மேலும், படம் திட்டமிட்டபடி டிசம்பர் 6ம் தேதி வெளியாகும், வெளிவரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.