தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமாவில் பல புதிய முன்னெடுப்புகளைச் செய்தவர், செய்து வருபவர் கமல்ஹாசன். 'அவிட் எடிட்டிங், டிஜிட்டல் சினிமா' என சில உதாரணங்களை அதற்குச் சொல்லலாம். சினிமாவில் வரும் புதிய வளர்ச்சி, புதியவர்களின் எண்ணங்களுக்கு எப்போதும் தனது ஆதரவைத் தெரிவிப்பவர்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சூரி, அன்னா பென் மற்றும் பலர் நடிப்பில் நாளை(ஆக., 23) வெளியாக உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தைப் பார்த்த பின் அதைப் பாராட்டி நேற்று ஒரு நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அக்கடிதத்தின் கடைசி இரண்டு வரிகளான, “சாளரமல்லாத சிறையாக தமிழ் சினிமாவை பழைய வர்த்தகர்கள் வைத்திருக்க முடியாது. புதிய பார்வையாளர்களும், புதிய படைப்பாளர்களும் பல்கி விட்டார்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது அந்த வரிகள் சினிமாவிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய சினிமா வியாபாரிகளின் கைகளில் இனி சினிமா இருக்காது. புதிதாக இயக்க வருபவர்கள், சினிமாவைப் புதிதாக ரசிப்பவர்கள் அதிகம் வந்துவிட்டார்கள்,” என்பதுதான் அதன் எளிய வார்த்தை வடிவம்.
கமல்ஹாசன் பொதுவாக அப்படி குறிப்பிட்டிருந்தாலும் அவர் சிலரை நோக்கித்தான் அந்த வார்த்தைகளைச் சொல்கிறார் என்பது பலருக்கும் புரிந்துவிட்டது. அவரது வரிகள் சில சீனியர் சினிமாக்காரர்களைக் கிண்டலடிப்பதாகவே உள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதில் சில சீனியர் இயக்குனர்களும் அடக்கம்.