ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய் இன்று(ஆக., 22) அக்கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்து வைத்து அவரது கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரன், அம்மா ஷோபா ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. விஜய்யும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள் என்று வெளிவரும் தகவல்களை அவை உறுதி செய்வதாகவே உள்ளன.
கட்சிக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு விஜய் அங்கிருந்து நகர்ந்து சென்ற போது அவருடைய அம்மா விஜய்யின் கையைப் பிடித்து ஏதோ சொல்ல முயற்சிக்கிறார். ஆனால், அதை கண்டு கொள்ளாமல், அம்மாவை திரும்பிக் கூடப் பார்க்காமல் அந்த இடத்தை விட்டு விஜய் நகரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் உடனடியாகப் பரவியது.
தன்னுடைய அம்மாவை விஜய் மதிக்காமல் செல்வது சரியா என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேடையில் பேசும் போது மட்டும் அப்பா, அம்மாவுக்கு நன்றி சொல்லியிருந்தார் விஜய்.
விஜய் தீவிர அரசியலில் இறங்கும் போது அவரது குடும்பத்தினரைப் பற்றியப் பேச்சுக்களும் அவருக்கு எதிராகத் திரும்பும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.