ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் |
இப்போதெல்லாம் குறைந்த நாளில் ஒரு படத்தை எடுத்து முடிப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது. படத்தை ஒரு மாதத்தில் முடித்தோம், 20 நாளில் முடித்தோம் என்று பெருமையாக பேசிக் கொள்வார்கள். ஆனால் 1932ம் ஆண்டு வெளிவந்த அதாவது 92 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'ஹரிச்சந்திரா' 21 நாளில் எடுக்கப்பட்ட படம்.
மேடை நாடகமாக நடத்தப்பட்டு வந்த ஹரிச்சந்திராவை சாகர் மூவி டோன் நிறுவனம் திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்தது. அப்போது நடிப்பதற்கு ஆள் இருந்தாலும், கேமராவை கையாள்வதற்கும், படத்தை இயக்குவதற்கும் வெளிநாட்டினர் தேவைப்பட்டார்கள். அப்படி ஜெர்மன் நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட ஒருவர்தான் முதலில் ஹரிச்சந்திராவை இயக்கினார். பின்னர் அவர் பாதியிலேயே கிளம்பிவிட மீதி படத்தை ஹந்தி இயக்குனர் சர்வோட்டம் படாமி என்பவர் எடுத்து முடித்தார். அவருடன் ராஜா சந்திரசேகர், டி.சி.வடிவேலு நாயக்கர் ஆகியோர் இணை இயக்குனர்களாக பணியாற்றினார்கள். வி.எஸ்.சுந்தரேச அய்யர், நுங்கம்பாக்கம் ஜானகி, குமாரி ருக்மணி நடித்தார்கள்.
சுமார் 18 ரீல்களை கொண்ட இந்த படம் முன்றரை மணி நேரம் ஓடக்கூடியது. 30 பாடல்களை கொண்டது. இதை எப்படி 21 நாளில் எடுத்தார்கள் என்றால்... அதாவது 6 மாதம் வரை ஒத்திகை நடத்தி, நாடகத்தை அப்படியே நடத்தி அதை அப்படியே படம் பிடித்தார்கள். சில காட்சிகள் மட்டும் குளோஸ் அப், பாடல் காட்சிகளில் கூடுதல் அசைவுகள் என படத்தை எடுத்தார்கள். படமும் பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தமிழில் வெளிவந்த 3வது பேசும் படம். 4 பிரதிகள் எடுக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டது.