அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில், சிறுவர்கள் பொன்வேல், ராகுல், மற்றும் நிகிலா விமல், கலையரசன் உள்ளிட்டவர்கள் நடித்த 'வாழை' படம் நேற்று வெளியானது. இப்படத்திற்கு திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குனர்கள், நடிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் பலரும் நேரிலேயே கலந்து கொண்டனர். அதில் கலந்து கொள்ள முடியாத சிலர் சமூக வலைத்தளங்களிலும், வீடியோக்கள் மூலமும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த 'கொட்டுக்காளி' படம் நேற்று வெளியானது. அந்தப் படத்துடன் போட்டி போடும் விதத்தில்தான் 'வாழை' படமும் வெளியாகி உள்ளது. இருந்தாலும் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அந்த வாழ்த்து வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் மாரி செல்வராஜ். ஆனால், அந்தப் பதிவிற்கான கமெண்ட் பகுதியில் 'வெரிபைடு அக்கவுண்ட்' மட்டுமே பதிலளிக்கும் விதத்தில் கட்டுப்பாடு செய்துள்ளார்.
ஏன் இப்படி செய்துள்ளீர்கள் என ரசிகர் ஒருவர் அதில் கமெண்ட் போட்டுள்ளார். மாரி செல்வராஜ் அவருடைய சில பதிவுகளுக்கு அனைவரும் கமெண்ட் போடும் விதத்திலும், சில பதிவுகளுக்கு 'வெரிபைடு அக்கவுண்ட்' பதிவிடும் விதத்திலும் மட்டுமே 'செட்டிங்'ஐ மாற்றி மாற்றி வைத்து வருகிறார்.