திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‛கூலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜை பொறுத்தவரை படத்திற்கு படம் புதுப்புது காம்பினேஷன்களில் நட்சத்திர பட்டாளங்களை தன்னுடன் இணைத்துக் கொள்வார். அந்த வகையில் இந்த படத்தில் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் சத்யராஜ் இணைந்து நடிக்கிறார். அதுமட்டுமல்ல நடிகை ஷோபனாவும் நீண்ட நாட்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த படத்திற்காக ரஜினிகாந்த் உடன் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது கன்னட நடிகர் உபேந்திராவும் கூலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் ரஜினிகாந்த் உடன் தான் இணைந்து நடிக்கும் விஷயத்தை ஆர்வம் மிகுதியால் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளார் நடிகர் உபேந்திரா.
அதே சமயம் இந்த பதிவை சில நிமிடங்களிலேயே அவர் நீக்கியும் விட்டார். ஆனாலும் அவரது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. கன்னடத்தில் பிரபல இயக்குனர், நடிகர் என பவனி வரும் உபேந்திரா கடந்த 2008ல் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சத்யம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 16 வருடங்கள் கழித்து மீண்டும் கூலி படத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.