இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களுக்கு பிறகு ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய படம் சார்பட்டா பரம்பரை. 2021ம் ஆண்டு நேரடியாகவே ஓடிடி.,யில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கருத்துக்கள் நிலவின. ஆனால் எதிர்பார்த்தபடி விருது கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அது குறித்து பா.ரஞ்சித் அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛சார்பட்டா பரம்பரை படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். அதேசமயம் படத்தின் இரண்டாம் பகுதி சரி இல்லை என்று சிலர் விமர்சனம் செய்தார்கள். சில விழாக்களில் கிரிட்டிக்ஸ் பிரிவில் சார்பட்டா பரம்பரை பல விருதுகளை பெற்றுள்ளது. இந்த விருதை பெற்றால் கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும். ஆனபோதும் சார்பட்டா பரம்பரை படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை. காரணம் திட்டமிட்டு சிலர் எனது வேலையை மதிக்கக்கூடாது என்று புறக்கணிக்கிறார்கள். என் மீதான வெறுப்பை தான் இப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது'' என்று தெரிவித்திருக்கிறார் பா. ரஞ்சித்.