தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களுக்கு பிறகு ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய படம் சார்பட்டா பரம்பரை. 2021ம் ஆண்டு நேரடியாகவே ஓடிடி.,யில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கருத்துக்கள் நிலவின. ஆனால் எதிர்பார்த்தபடி விருது கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அது குறித்து பா.ரஞ்சித் அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛சார்பட்டா பரம்பரை படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். அதேசமயம் படத்தின் இரண்டாம் பகுதி சரி இல்லை என்று சிலர் விமர்சனம் செய்தார்கள். சில விழாக்களில் கிரிட்டிக்ஸ் பிரிவில் சார்பட்டா பரம்பரை பல விருதுகளை பெற்றுள்ளது. இந்த விருதை பெற்றால் கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும். ஆனபோதும் சார்பட்டா பரம்பரை படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை. காரணம் திட்டமிட்டு சிலர் எனது வேலையை மதிக்கக்கூடாது என்று புறக்கணிக்கிறார்கள். என் மீதான வெறுப்பை தான் இப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது'' என்று தெரிவித்திருக்கிறார் பா. ரஞ்சித்.