சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் சில பல பஞ்சாயத்துகள், வழக்குகள் ஆகியவற்றால் தட்டுத் தடுமாறி எழும்பி வருகிறது. கட்டிட வேலைகள் ஆரம்பமாகி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அதை விரைந்து முடிக்க தற்போதைய நிர்வாகக் குழுவினர் முயன்று வருகிறார்கள்.
ஏற்கெனவே நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், நெப்போலியன், தனுஷ், கார்த்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தலா 1 கோடி ரூபாயை நிதியாக வழங்கினார்கள். அதையடுத்து நின்று போன கட்டிட வேலைகள் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் ஆரம்பமானது.
இருந்தாலும் இன்னும் சில கோடிகள் இருந்தால் தான் கட்டிட வேலைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளதாம். எனவே, வெளிநாடுகளில் நடிகர் சங்கம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தி தேவையான நிதியைப் பெற ஆலோசித்து வருகிறார்கள்.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் இது குறித்து சமீபத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அடுத்து நடிகர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆலோசித்துள்ளார்கள். விரைவில் கலை விழா குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.