தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் அதிகம் இருப்பதாக நீதிபதி ஹேமா கமிஷன் அளித்த அறிக்கை தெரிவித்தது. இதையடுத்து பலரும் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதனால் மலையாள சினிமா உலகம் அதிர்ச்சியில் இருக்கிறது. மேலும் அங்குள்ள நடிகர் சங்கமும் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக இருந்த மோகன்லால் உள்ளிட்ட 17 நிர்வாகிகளும் ராஜினாமா செய்துள்ளனர்.
சினிமா துறையில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை சந்திப்பது பற்றி நடிகை குஷ்பு நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கம் வருமாறு : சினிமா மட்டுமல்லாது எல்லா துறையிலும் இது நடக்கிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இந்த பிரச்சனை உள்ளது. இவ்வளவு நாள் ஏன் சொல்லவில்லை என கேட்காமல் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அதேசமயம் அதை உடனே சொன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பெண்களை ஆண்கள் மதியுங்கள். பெண்கள் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் ஆண்களும் குரல் கொடுங்கள். இதுபோன்ற பிரச்னைகளுக்கு பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தில் இருந்து கூட ஆதரவு தருவதில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து தைரியமாக பேச வேண்டும். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் ‛நோ' என்றால் ‛நோ' தான். உங்கள் கண்ணியம், மரியாதையை ஒரு போதும் விட்டுத்தராதீர்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.