சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
குரங்கு பொம்மை படத்திற்கு பிறகு நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்த திரைப்படம் 'மகாராஜா'. இப்படம் வசூல் ரீதியாக உலகளவில் ரூ. 100 கோடியை கடந்தது.
இப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது. தற்போது ஓடிடியிலும் படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிம்பு இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி உள்ளார். இதுபற்றி நிதிலன் அவரது சமூக வலைதள பக்கத்தில், " சிலம்பரசன் சார், மகாராஜா படத்தை பார்த்த பிறகு சந்தித்து பேசியதற்கு நன்றி. மகாராஜா படத்தை குறித்து ஆழமாக கலந்துரையாடினோம். நீங்கள் யதார்த்தம் மற்றும் ரொம்ப எளிமையாக இருந்தீர்கள். உங்களைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி'' என பதிவிட்டிருந்தார்.