தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

குரங்கு பொம்மை படத்திற்கு பிறகு நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்த திரைப்படம் 'மகாராஜா'. இப்படம் வசூல் ரீதியாக உலகளவில் ரூ. 100 கோடியை கடந்தது.
இப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது. தற்போது ஓடிடியிலும் படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிம்பு இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி உள்ளார். இதுபற்றி நிதிலன் அவரது சமூக வலைதள பக்கத்தில், " சிலம்பரசன் சார், மகாராஜா படத்தை பார்த்த பிறகு சந்தித்து பேசியதற்கு நன்றி. மகாராஜா படத்தை குறித்து ஆழமாக கலந்துரையாடினோம். நீங்கள் யதார்த்தம் மற்றும் ரொம்ப எளிமையாக இருந்தீர்கள். உங்களைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி'' என பதிவிட்டிருந்தார்.