தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் 'பராரி'. இதில் ஹரி சங்கர், சங்கீதா நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். ராஜு முருகன் உதவியாளர் எழில் பெரியவெடி இயக்கி உள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் எழில் பெரியவெடி கூறும்போது : இந்த படத்தின் களமும், கதையும் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாதது. வட மாவட்டங்களில் இருந்து பராரியாக பெங்களூரு மாந்தோப்புக்கு வேலைக்கு செல்லும் மக்களை பற்றிய கதை. ஜாதி மோதல், தீண்டாமை பற்றி பேசும் படம். கர்நாடக மக்களும், தமிழ் மக்களும் சகோதரன் சகோதரி போன்று வாழ்கிறார்கள். ஆனால் இங்கும், அங்கும் சிலர் அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். படத்தின் 20 நிமிட கிளைமாக்ஸ் ஒவ்வொரு மனிதர்களையும் உலுக்கி விடும். ஜாதி, மதங்களை தாண்டிய மனிதம்தான் ஆகப்பெரிய சக்தி, என்பதை சொல்லும் படமாக உருவாகி உள்ளது. என்றார்.