பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் 'பராரி'. இதில் ஹரி சங்கர், சங்கீதா நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். ராஜு முருகன் உதவியாளர் எழில் பெரியவெடி இயக்கி உள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் எழில் பெரியவெடி கூறும்போது : இந்த படத்தின் களமும், கதையும் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாதது. வட மாவட்டங்களில் இருந்து பராரியாக பெங்களூரு மாந்தோப்புக்கு வேலைக்கு செல்லும் மக்களை பற்றிய கதை. ஜாதி மோதல், தீண்டாமை பற்றி பேசும் படம். கர்நாடக மக்களும், தமிழ் மக்களும் சகோதரன் சகோதரி போன்று வாழ்கிறார்கள். ஆனால் இங்கும், அங்கும் சிலர் அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். படத்தின் 20 நிமிட கிளைமாக்ஸ் ஒவ்வொரு மனிதர்களையும் உலுக்கி விடும். ஜாதி, மதங்களை தாண்டிய மனிதம்தான் ஆகப்பெரிய சக்தி, என்பதை சொல்லும் படமாக உருவாகி உள்ளது. என்றார்.