ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

திரையுலகில் கடந்த பல வருடங்களாகவே நடிகைகள் உள்ளிட்ட பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள், சமமான சம்பளம் மறுப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் இருந்து வருவதாக சொல்லப்பட்டு வந்தது. நடிகைகள் ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக குரல் எழுப்பினர். அதைத் தொடர்ந்து கேரள அரசு இதில் தலையிட்டு நீதிபதி ஹேமா தலைமையில் இது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைத்தது,
சமீபத்தில் வெளியான அந்த ஹேமா கமிஷன் அறிக்கை இதுவரை சொல்லப்பட்டு வந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை உறுதி செய்தது, அதிலும் குறிப்பாக மலையாள நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள், நடிகைகள் கொண்டு செல்லும் புகாரை கண்டு கொள்வதில்லை என்றும், அதில் நிர்வாகிகள் ஆக இருக்கும் சில நடிகர்களே இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார்கள் என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து மோகன்லால் தலைவராக உள்ள மலையாள நடிகர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்தனர். சிலர் இந்த ராஜினாமாவை வரவேற்றாலும் பலரும் இந்த செயலை விமர்சித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இதுபோன்ற பாதிப்புகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகை பார்வதி இப்படி நடிகர் சங்கத்தை சேர்ந்த தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்தது கோழைத்தனம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, “ஹேமா கமிஷன் அறிக்கை எங்களது சினிமா பெண்கள் நல அமைப்பு கடந்த சில வருடங்களாக முன்னெடுத்த போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அதேசமயம் இந்த அளவிற்கு நிலைமை சீரியஸாக செல்லும் அளவிற்கு வளர்த்து விட்ட மலையாள நடிகர் சங்கத்தினர், பிரச்சனை என்று வரும்போது அதுகுறித்து அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்னெடுக்காமல் இப்போது வெளியாகும் குற்றச்சாட்டுகளை திசை திருப்பும் விதமாக இப்படி ராஜினாமா செய்தது கோழைத்தனம். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் மறைக்கப்பட்டு இவர்கள் ராஜினாமா செய்தது மட்டுமே பெரிதாக பேசப்படுகிறது” என்று கடுமையாக சாடியுள்ளார்.