ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மாரி செல்வராஜ் இயக்கத்தில், பொன்வேல், ராகுல், கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான 'வாழை' படத்திற்கு விமர்சகர்களின் பாராட்டும், ரசிகர்களின் பாராட்டும் கிடைத்தது. பல அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் படத்தைப் பார்த்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
தற்போது அமெரிக்க சுற்றுப் பயணத்தில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் படத்தைப் பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜிற்கு அன்பின் வாழ்த்துகள்.
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம் !
தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜிற்கு மீண்டும் வாழ்த்துகள்!,” என சமூக வலைத்தளத்தில் தன் வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார்.