தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இந்தியாவில் புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகி எம் எஸ் சுப்புலட்சுமி. இந்தியாவில் உயர்ந்து விருதான பாரத ரத்னா விருது பெற்றவர். 'மீரா' என்ற படத்தில் மீராவாக நடித்தவர். இவரது வாழ்க்கை கதை சினிமாவாக தயாராகிறது. இதில் எம்எஸ் சுப்புலட்சுமியாக வித்யா பாலன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அவரது வாழ்க்கை மேடை நாடகமாக உருவாகிறது.
எழுத்தாளர் வி.எஸ்.வி.ரமணன் எழுதிய 'காற்றினிலே வரும் கீதம்' புத்தகத்தை தழுவி அதே பெயரில் இந்த நாடகம் உருவாகியுள்ளது. இதை பம்பாய் ஞானம் இயக்குகிறார். தக்ஷின் இசையமைக்கிறார். த்ரீ நிறுவனம் மற்றும் கஸ்தூபா மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த நாடகம் வரும் செப்டம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் வாணி மகால் மற்றும் நாரத கான சபையில் நடைபெற உள்ளது. சுப்புலட்சுமியாக நாடக நடிகை லாவண்யா நடிக்கிறார்.