ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் |
மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்களுக்கு எதிராக ஹேமா கமிஷன் விசாரண நடத்தி வருவதை அடுத்து பல சீனியர் நடிகைகளும் இதுகுறித்து பேச தொடங்கி இருக்கிறார்கள். என்றாலும் ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் இது குறித்து கருத்து சொல்ல மறுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் இது குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறும் போது, மலையாள சினிமா மட்டுமின்றி அனைத்து மொழி சினிமாக்களிலும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து துணிச்சலாக பேசும் நடிகைகளுக்கு முக்கிய நடிகர்கள் மிரட்டல் விடுகிறார்கள். அதன் காரணமாக பலரும் இதை வெளியில் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்கள். மலையாள சினிமாவில் இந்த பாலியல் விவகாரத்தில் 10, 20 விக்கெட்டுகள்தான் விழும். ஆனால் தமிழில் பட்டியல் போட்டால் 500, 600 விக்கெட்டுகள் விழும்.
இங்கு நடிகைகள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கும் நிலையில் சினிமா சங்கங்கள் இல்லை. விஷால் செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் சொல்வதற்கு முன்பே நான் அடித்து விட்டேன். ஆனால் அடித்தவர்களை நீங்கள் எப்படி சித்தரித்தீர்கள். அடி வாங்குனவர்களை நீங்கள் எங்கே போய் வைத்துள்ளீர்கள். அவர்களுடைய பதவியை பறித்தீர்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ள ரேகா நாயர், 2014ம் ஆண்டு ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு வந்த பல பெண்களையும் மேனேஜர்கள் அழைத்து சென்றார்கள். அதை அப்போதே நான் ஓப்பனாக கூறினேன். அது நடந்து பத்து வருஷம் ஆகிவிட்டது. ஆனால் அப்படி வெளிப்படையாக சொன்ன பிறகும் அப்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.