ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஹேமா கமிட்டி அறிக்கையின் தாக்கம் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. இங்குள்ள முன்னணி நடிகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. முன்னணி நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பேசத் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து விவாவதிக்கவும், முடிவெடுக்கவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் வருகிற 8ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், நடிகைகள் பாதுகாப்புக்கு புதிய கமிட்டி அமைப்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட நடிகர் நடிகைகளின் நட்சத்திர கலை விழா நடத்துவது குறித்தும், நவம்பர் 1ந் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட இருப்பது குறித்தும் பொதுக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படுகிறது.