இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்துள்ள கோட் படம் நாளை செப்., 5ல் உலகமெங்கும் வெளியாகிறது. கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து மீடியாக்களில் தோன்றி இப்படம் குறித்த புரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார் இப்பட இயக்குனர் வெங்கட் பிரபு. அப்போது கோட் படம் குறித்து எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் சில தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் இந்த படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தில் நடிக்க வைக்கப்பட்டிருக்கும் மறைந்த நடிகர் விஜயகாந்த் கேரக்டர் பற்றியும் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறுகையில், இந்த கோட் படத்தில் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்த விஜயகாந்தின் கேரக்டரை பயன்படுத்தி உள்ளோம். கதைப்படி காவல்துறை உயர் அதிகாரியாக வரும் விஜயகாந்த், சிறிது நேரம் வந்தாலும் அவரது கம்பீரக் குரலில் ஒலிக்கும் அந்த வசனங்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.