சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
சினிமா தொடங்கிய காலத்தில் நாயகனும், நாயகியும் வசனங்களால் பேசிக் கொள்வதை விட பாடல்களால் பேசிக்கொள்வதுதான் அதிகம். நாடகத்தில் இருந்த இந்த வழக்கம் சினிமாவிலும் தொடர்ந்தது. அந்த வகையில் 50 பாடல்களுடன் வெளியான படம் 'திரௌபதி வஸ்திராபகரணம்' (திரவுபதியின் ஆடை அலங்காரம்). மகாபாரதத்தின் மிக முக்கிய பகுதியான பாஞ்சலியை துச்சாதனன் துகிலுறியும் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதனையே முழு நேர படமாக எடுத்திருந்தார்கள். 16 பாகங்களை கொண்ட படமாக கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஓடும் படமாக வெளிவந்தது.
தமிழ் சினிமாவின் முதல் நாயகியான டி.பி.ராஜலட்சுமி திரௌபதியாக நடித்தார். அன்றைய புகழ்பெற்ற பாடகர் வி.ஏ.செல்லப்பா துரியோதனனாக நடித்தார். செருகளத்தூர் சாமா கிருஷ்ணராக நடித்தார். மற்றும் பி.எஸ்.சிவபாக்யம், வாசுதேவ பிள்ளை, பந்துலு அய்யர் உள்ளிட்ட பலர் நடித்தனர். சேலம் ஏஞ்சல் பிலிம் கம்பெனி தயாரித்திருந்தது. முழு படமும் கொல்கத்தா பயனியர் பிலிம் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு வெளியானது.