ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் ‛நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்காஹ்' என சில படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நஸ்ரியா. அதன்பிறகு பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் உடன் திருமணம் முடிந்த பின்னர் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த நஸ்ரியா தமிழ் சினிமாவில் மட்டும் நடிக்கவில்லை.
தற்போது பல வருடங்களுக்கு பிறகு தமிழில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகின்றார். ஆனால், இது படம் அல்ல வெப் தொடர். இந்த வெப் தொடரில் நஸ்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு நடிக்கிறார். இதனை டைரக்டர் ஏ.எல்.விஜய் தயாரிக்கிறார். சூர்யா பிரதாப் இயக்குகிறார் .
இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இப்போது கிடைத்த புதிய தகவலின் படி, 1940களின் பின்னனியில் இதன் கதைகளம் நடைபெறுகிறதாம். உண்மை கதையான லஷ்மிகாந்தன் கொலை வழக்கு கதையை பின்பற்றி இந்த தொடர் உருவாகிறது. இதில் தியாகராஜர் பாகவதர் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் நடித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். நஸ்ரியா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.