தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தமிழில் ‛நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்காஹ்' என சில படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நஸ்ரியா. அதன்பிறகு பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் உடன் திருமணம் முடிந்த பின்னர் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த நஸ்ரியா தமிழ் சினிமாவில் மட்டும் நடிக்கவில்லை.
தற்போது பல வருடங்களுக்கு பிறகு தமிழில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகின்றார். ஆனால், இது படம் அல்ல வெப் தொடர். இந்த வெப் தொடரில் நஸ்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு நடிக்கிறார். இதனை டைரக்டர் ஏ.எல்.விஜய் தயாரிக்கிறார். சூர்யா பிரதாப் இயக்குகிறார் .
இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இப்போது கிடைத்த புதிய தகவலின் படி, 1940களின் பின்னனியில் இதன் கதைகளம் நடைபெறுகிறதாம். உண்மை கதையான லஷ்மிகாந்தன் கொலை வழக்கு கதையை பின்பற்றி இந்த தொடர் உருவாகிறது. இதில் தியாகராஜர் பாகவதர் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் நடித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். நஸ்ரியா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.