தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இன்றைக்கு நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இதைப் பற்றி கற்பனை செய்து கூட பார்க்க முடியாத 1980ல் வந்த படம் 'அவன் அவள் அது'.
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவகுமார், லட்சுமி, ஸ்ரீபிரியா, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இது சிவசங்கரியின் 'ஒரு சிங்கம் முயலாகிறது' என்ற நாவலை தழுவி உருவானது. விசு திரைக்கதை, வசனம் எழுதினார். எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். 'இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம்...' என்ற புகழ்பெற்று பாடல் இடம் பெற்றிருந்தது இந்த படத்தில் தான்.
சிவகுமாரும், லட்சுமியும் கணவன் மனைவி. இருவருக்கும் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. சிவகுமாரின் தந்தைக்கு வாரிசை பார்க்க வேண்டும் என்கிற ஆசை. இதற்காக அப்போது வெளிநாட்டில் அறிமுகமாகி இருந்த 'வாடகை தாய்' முறையில் குழந்தையை பெற்றுக் கொள்ள முடிவு செய்கிறார்கள். அதன்படி வாடகைக்கு தாய் ஸ்ரீ பிரியா மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
வாடகைத்தாய் யார் என்பது மருத்துவர்கள் தவிர வேறு யாரும் அறிந்திருக்கக் கூடாது என்பது விதி. அதையும் மீறி இவர் தான் வாடகைத்தாய் என்பது தெரிந்து விட்டால் என்ன நடக்கும் என்பது மீதி கதை.