தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
இன்றைக்கு நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இதைப் பற்றி கற்பனை செய்து கூட பார்க்க முடியாத 1980ல் வந்த படம் 'அவன் அவள் அது'.
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவகுமார், லட்சுமி, ஸ்ரீபிரியா, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இது சிவசங்கரியின் 'ஒரு சிங்கம் முயலாகிறது' என்ற நாவலை தழுவி உருவானது. விசு திரைக்கதை, வசனம் எழுதினார். எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். 'இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம்...' என்ற புகழ்பெற்று பாடல் இடம் பெற்றிருந்தது இந்த படத்தில் தான்.
சிவகுமாரும், லட்சுமியும் கணவன் மனைவி. இருவருக்கும் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. சிவகுமாரின் தந்தைக்கு வாரிசை பார்க்க வேண்டும் என்கிற ஆசை. இதற்காக அப்போது வெளிநாட்டில் அறிமுகமாகி இருந்த 'வாடகை தாய்' முறையில் குழந்தையை பெற்றுக் கொள்ள முடிவு செய்கிறார்கள். அதன்படி வாடகைக்கு தாய் ஸ்ரீ பிரியா மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
வாடகைத்தாய் யார் என்பது மருத்துவர்கள் தவிர வேறு யாரும் அறிந்திருக்கக் கூடாது என்பது விதி. அதையும் மீறி இவர் தான் வாடகைத்தாய் என்பது தெரிந்து விட்டால் என்ன நடக்கும் என்பது மீதி கதை.