மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ |
இப்போதெல்லாம் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு நீளத்தை குறைப்பதும் கிளைமாக்ஸ் மாற்றுவதும் சகஜமான ஒன்றாகிவிட்டது. சமீபத்தில் கூட 'இந்தியன் 2' படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டன. இந்த வகையில் வெளியீட்டுக்கு பிறகு காட்சிகள் குறைக்கப்பட்ட முதல் படம் 'பவளக்கொடி'.
1934ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை கே.சுப்பிரமணியம் இயக்கியிருந்தார். தியாகராஜ பாகவதர் நடித்திருந்தார். இருவருக்குமே இது முதல் படமாகும். எஸ்.எஸ்.மணி பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். பாபநாசம் சிவன் இசையமைத்திருந்தார்.
படத்தில் 55 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. வசனங்களை விட பாடல்கள் அதிகமாக இருந்தது. நாயகனும் நாயகியும் சந்திக்கும் போதெல்லாம் பாடல்களாலேயே பேசிக் கொண்டனர்.
அன்றைய ரசிகர்கள் பாடலை ரசித்தாலும் அது கதையோட்டத்திற்கு தடையாக இருப்பதாக கருதினார்கள். இதனால் படம் வெளியான சில நாட்களிலேயே படத்திற்கான வரவேற்பு குறைய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கே சுப்பிரமணியம், பத்து பாடல்கள் வரை குறைத்து, கதைக்கும் வசனத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து மீண்டும் வெளியிட்டார். அதன் பிறகு படம் பல வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.