ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ்த் திரையுலகத்தின் சீனியர் நடிகை ராதிகா, இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவரான விராட் கோலியை விமானப்பயணத்தில் சந்தித்துள்ளார். அது பற்றி, “லட்சக்கணக்கான மக்களால் விரும்பப்படும் சாதனையாளர் விராட்கோலியுடன் லண்டனிலிருந்து சென்னைக்கு வந்த விமானப் பயணத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் இங்கு விளையாட வருகிறார், மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். செல்பிக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார். ராதிகாவுடன் விராட் கோலி எடுத்த செல்பி புகைப்படத்தையும் ராதிகா பகிர்ந்துள்ளார்.
இந்தியாவுக்கு வந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 போட்டிகளை விளையாட உள்ளது வங்கதேச அணி. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் செப்டம்பர் 19ம் தேதி ஆரம்பமாகி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்காக லண்டனில் ஓய்வில் இருந்த விராட் கோலி அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த போது ராதிகாவுடனான சந்திப்பு நடந்துள்ளது.