ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நடன இயக்குனர் ஜானி மீதான பாலியல் குற்றச்சாட்டு. 21 வயதே ஆன நடனப் பெண் ஒருவர் கொடுத்த புகார் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்த அவரை கட்சியிலிருந்தும் உடனடியாக நீக்கினார்கள்.
இந்நிலையில் தெலுங்கு பிலிம் சேம்பர் தற்போது ஜானி மீதான விசாரணையைத் துவக்கியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பே அதாவது 2019ம் ஆண்டிலிருந்தே அந்தப் பெண் நடனக் குழுவில் இடம் பெற்று வந்துள்ளார். ஒரு மைனர் பெண்ணை எப்படி நடனக்குழுவில் ஜானி சேர்த்தார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்களாம். இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிட்டி விசாரணையை நடத்தி வருகிறது என்றும் பிலிம் சேம்பர் அறிவித்துள்ளது.
தற்போது தெலுங்கு சினிமா மற்றும் டிவி டான்சர் மற்றும் டான்ஸ் டைரக்டர்ஸ் அசோசியேஷன் தலைவராக உள்ள ஜானியின் தலைவர் பதவியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும் அந்த சங்கத்தினரை தெலுங்கு பிலிம் சேம்பர் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், திரைத் துறையைச் சேர்ந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் அளிக்க தனியாக புகார் பெட்டி ஒன்றை சேம்பர் அலுவலக வாயிலில் வைத்துள்ளோம். அதில் புகார் அளிக்கலாம் என்றும், அவர்களது புகார் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சேம்பர் சார்பா அதன் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.