ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கே.பாலசந்தரின் 'மன்மத லீலை' படத்தில் அறிமுகமானவர் பிரவீனா. இந்தப் படத்தில் ஹேமா சவுத்ரி, ஜெயப்ரதா, ஒய்.விஜயா, ரீனா உள்பட பலர் நடித்தார்கள். அவர்களில் ஒருவராக பிரவீனா நடித்தார். படத்தின் டைட்டில் கார்டில்கூட அவர் பெயர் இடம் பெறவில்லை. அதன்பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்தார். இதில் மலையாளத்தில் மட்டும் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
ஆனால் அவருக்கு தான் அறிமுகமான தமிழில் ஒரு படத்திலாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்கிற கனவு இருந்தது. ஆனாலும் கிடைக்கவில்லை, மாந்தோப்பு கிளியே, ஜம்பு. அடுக்குமல்லி, பசி படங்களில் சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டரில் நடித்தார். கடைசியாக பாக்யராஜ் இயக்கிய 'பாமா ருக்மணி' படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். இன்னொரு ஹீரோயின் ராதிகா.
அதன் பிறகு பாக்யராஜையே திருமணம் செய்து கொண்ட அவர், திருமணமான இரண்டே ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது 25வது வயதில் நிறைவேறாத கனவுடன் மரணம் அடைந்தார்.