சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
பிக்பாஸ் சீசன் 8க்கான வேலைகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதால் மக்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் முன்னாள் போட்டியாளரான இயக்குனர் பி வாசுவின் மகனான நடிகர் சக்தி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'நான் வாழ்க்கையில் எதிலுமே தோற்றது கிடையாது. சினிமாவிற்கு வந்த பிறகு தான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறேன். அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது தான் நான் வாழ்க்கையிலேயே செய்த மிகப்பெரிய தவறு. அப்பா போக வேண்டாம் என்று சொன்னார். நான் பிடிவாதமாக போனேன். நான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வந்த பிறகு பல பிரச்னைகளை சந்தித்தேன். அதனால் பல நாட்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்தேன்' என்று கூறியுள்ளார்.