ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் தமிழில் வாத்தி படத்தில் நடித்தார். தொடர்ந்து தெலுங்கிலும் நடிக்கிறார். மலையாள சினிமாவில் சமீபத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. இதைத்தொடர்ந்து மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக பல திரைப்பிரபலங்களும் பேசி வருகின்றனர். இதில் சில முன்னணி நடிகர்களின் பெயர்களும் உள்ளன. அவர்கள் மீது வழக்கும் பதிவாகி உள்ளது.
ஹேமா கமிட்டி போன்று மற்ற திரையுலகிலும் இதுபோன்று கமிட்டி அமைக்க வேண்டும் என்ற குரல்கள் எழ துவங்கி உள்ளன. இந்நிலையில் ஹேமா கமிட்டி பற்றி சம்யுக்தா கூறுகையில், ‛‛காட்டில் மாட்டிக் கொண்டு வழிதேடும் விதமாக தான் இன்றைய சினிமா உள்ளது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி சிலர் சுரண்டல்களில் ஈடுபடுகின்றனர். சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும். அதற்கு ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் ஒரு கேம் சேஞ்சராக மாறும்'' என்கிறார்.