ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் அஜித் சினிமாவை தாண்டி கார், பைக் ரேஸ், போட்டோகிராபி, சிறிய ரக டிரோன் உருவாக்கம், துப்பாக்கி சுடுதல் என பலவற்றிலும் ஆர்வம் மிக்கவர். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் விடாமுயற்சி படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் துபாயில் கார் ரேஸ் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அங்குள்ள கார் ரேஸ் கிளப்பில் உயர் ரக கார்களில் அவர் சீறி பாயும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அவர் 2025ல் மோடோ ஜிபி எனப்படும் கார் ரேஸில் களமிறங்க உள்ளார்.
இதுபற்றிய தகவலை கார் ரேஸ் வீரரான நரேன் கார்த்திகேயன் பிரேக்கிங் நியூஸ் என குறிப்பிட்டு வெளியிட்ட பதிவில், ‛‛2025ம் ஆண்டுக்கான மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஜிடி ரேஸிங் பிரிவில் எனது நண்பர் அஜித் களமிறங்க கடுமையாக உழைத்து வருகிறார். நிஜமாகவே அவர் ஒரு ஜாம்பவான் தான். அற்புதமான நடிகர் மற்றும் கார் ரேஸர். அவருக்கு அதிகமான கார் பந்தய அனுபவங்கள் இல்லை. இருந்தாலும் 2010ல் FIA F2ல் அவர் பங்கேற்று கார் ஓட்டியது எனக்கு நினைவில் உள்ளது. அவரின் திறமைகளுக்கு எல்லை இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு அற்புதமான மனிதர். குட் லக் தல. உங்களுக்கு நான் வழிகாட்டியாக இருந்து உங்களை மீண்டும் பந்தயத்தில் ஈடுபடுத்த முடிந்தால் அது ஒரு பாக்கியமாக இருக்கும்'' என பதிவிட்டுள்ளார்.