கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா |

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருவதால் தற்போது பிரமோஷன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், டீசரும் வெளியாகி இருக்கிறது. இப்படியான நிலையில் வேட்டையன் படத்தின் கலை இயக்குனர் கதிர் இப்படம் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார் .
அதில் அவர் கூறும் போது, ‛‛வேட்டையன் படத்தின் இடைவேளை வித்தியாசமாக முடியும். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை தூண்டுவதாக இருக்கும். அதேபோல் ரஜினியின் ஓப்பனிங் காட்சி மாஸாக இருக்கும். நீண்டநாளைக்கு பிறகு ரஜினி ரசிகர்களுக்கு இந்த காட்சி மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். சண்டை காட்சிகளிலும் அதிக உற்சாகத்துடன் நடித்துள்ளார் ரஜினி. இந்த படத்தின் கிளைமேக்ஸ் யாருமே எதிர்பார்க்காத வகையில் இருக்கும். பெரும்பாலும் கிளைமாக்ஸ் வரும்போது ஒரு சண்டைக்காட்சி நடக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படி இருக்காது. முற்றிலும் வித்தியாசமான மாறுபட்ட ஒரு கதை வடிவத்துடன் இடம் பெற்றிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.