நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருவதால் தற்போது பிரமோஷன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், டீசரும் வெளியாகி இருக்கிறது. இப்படியான நிலையில் வேட்டையன் படத்தின் கலை இயக்குனர் கதிர் இப்படம் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார் .
அதில் அவர் கூறும் போது, ‛‛வேட்டையன் படத்தின் இடைவேளை வித்தியாசமாக முடியும். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை தூண்டுவதாக இருக்கும். அதேபோல் ரஜினியின் ஓப்பனிங் காட்சி மாஸாக இருக்கும். நீண்டநாளைக்கு பிறகு ரஜினி ரசிகர்களுக்கு இந்த காட்சி மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். சண்டை காட்சிகளிலும் அதிக உற்சாகத்துடன் நடித்துள்ளார் ரஜினி. இந்த படத்தின் கிளைமேக்ஸ் யாருமே எதிர்பார்க்காத வகையில் இருக்கும். பெரும்பாலும் கிளைமாக்ஸ் வரும்போது ஒரு சண்டைக்காட்சி நடக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படி இருக்காது. முற்றிலும் வித்தியாசமான மாறுபட்ட ஒரு கதை வடிவத்துடன் இடம் பெற்றிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.