தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த 2018ம் ஆண்டு விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கி திரைக்கு வந்த படம் 96. காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு, விஜய் சேதுபதி - திரிஷாவின் கேரியரில் முக்கியமான படமாகவும் அமைந்தது. அந்த படத்தை அடுத்து தற்போது கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் பிரேம்குமார். இந்த படம் செப்டம்பர் 27ம் தேதி நாளை திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் பிரேம்குமாரிடம் ‛96' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ‛‛96 படம் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்ட கதையில் உருவானது. ஆனால் அப்படத்தின் இரண்டாம் பாகம் காதல் இல்லாமல் குடும்ப பிரச்னைகளை மையமாகக் கொண்ட உணர்வு பூர்வமான ஒரு கதையில் உருவாக இருப்பதாக'' தெரிவித்துள்ளார்.