சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிரபலமான நடிகர், நடிகைகளை பார்த்து விட்டால் அவர்களின் பின்னாடியே துரத்தி சென்று ரசிகர்கள் செல்பி எடுப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீடு திரும்பியிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன். அப்போது செல்பி எடுப்பதற்காக பைக்கில் ஒரு இளைஞர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
பாலோ பண்ணி வராதீர்கள் என்று பிரியங்கா சொன்னபோதும் அவர் விடாமல் துரத்தியதால், காரை நிறுத்தியவர், இதுபோன்று எல்லாம் காரை துரத்தி வரக்கூடாது. விபத்து ஏதேனும் நடந்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று அந்த ரசிகருக்கு அட்வைஸ் கொடுத்த பிரியங்கா மோகன், பின்னர் அவருடன் செல்பி எடுத்துள்ளார். அதன் பிறகே அந்த ரசிகர் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து திரும்பி இருக்கிறார்.