தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில், இப்படம் என்கவுன்டர் பற்றி பேசும் படம் என்பது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் வேட்டையன் படத்தை வெளியிட தடை கோரி, பழனிவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அவர் தாக்கல் செய்த அந்த மனுவில், வேட்டையன் படத்தில் இடம் பெற்றிருக்கும் என்கவுன்டர் சம்பந்தப்பட்ட வசனங்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது படத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், லைகா நிறுவனம் மற்றும் சென்சார் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.