தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
நடிகை கோமதி ப்ரியா ஓவியா தொடரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது 'சிறகடிக்க ஆசை' தொடரின் மூலம் புகழ் உச்சத்தை தொட்டுள்ள அவர் அந்த தொடரை விட்டு விலகியதாக பரவி வரும் செய்தியை பார்த்து ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், உண்மையில் அவர் தமிழில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரிலிருந்து விலகவில்லை. மலையாள மொழியில் சிறகடிக்க ஆசை தொடர் செம்பனீர் பூவே என்கிற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. அதிலும் கோமதி ப்ரியா தான் ஹீரோயினாக நடித்து வந்தார். இந்நிலையில், அவர் செம்பனீர் பூவே தொடரிலிருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் விலகுவதாக கூறியுள்ளார். அந்த செய்தி தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.