ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

ஆளும் மத்திய பா.ஜ., அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். சமீபகாலமாக லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர், நடிகர் பவன் கல்யாண் உடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் பா.ஜ.வை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். மேலும் அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோருடன் இருக்கும் போட்டோவையும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
அந்த போட்டோவை மேற்கொள் காட்டி ‛எனிமி, மார்க் ஆண்டனி' போன்ற படங்களை தயாரித்த வினோத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு : ‛‛உங்களுடன் அமர்ந்திருக்கும் மூன்று பேரும் தேர்தலில் ஜெயித்தவர்கள். ஆனால் நீங்கள் டெபாசிட் இழந்தவர், அதுதான் வித்தியாசம். என்னுடைய படத்தின் ஷூட்டிங்கின் போது உங்களால் ரூ.1 கோடி நஷ்டம் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டீர்கள். இதுபற்றி கேட்டதற்கு போனில் பேசுவதாக சொன்னீர்கள், ஆனால் பேசவில்லை. இந்த சம்பவம் 2024, செப்., 30ல் நடந்தது. அன்றைய தினம் 1000 துணை நடிகர்கள் இருந்தார்கள். 4 நாட்கள் உங்களுக்கு படப்பிடிப்பு இருந்தது. ஆனால் வேறு ஒரு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததால் நீங்கள் சென்றுவிட்டீர்கள். அதனால் அன்றைய தினம் படப்பிடிப்பு நின்றதோடு எனக்கு பெரும் நஷ்டமும் ஏற்பட்டது'' என தெரிவித்துள்ளார்.