தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஆளும் மத்திய பா.ஜ., அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். சமீபகாலமாக லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர், நடிகர் பவன் கல்யாண் உடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் பா.ஜ.வை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். மேலும் அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோருடன் இருக்கும் போட்டோவையும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
அந்த போட்டோவை மேற்கொள் காட்டி ‛எனிமி, மார்க் ஆண்டனி' போன்ற படங்களை தயாரித்த வினோத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு : ‛‛உங்களுடன் அமர்ந்திருக்கும் மூன்று பேரும் தேர்தலில் ஜெயித்தவர்கள். ஆனால் நீங்கள் டெபாசிட் இழந்தவர், அதுதான் வித்தியாசம். என்னுடைய படத்தின் ஷூட்டிங்கின் போது உங்களால் ரூ.1 கோடி நஷ்டம் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டீர்கள். இதுபற்றி கேட்டதற்கு போனில் பேசுவதாக சொன்னீர்கள், ஆனால் பேசவில்லை. இந்த சம்பவம் 2024, செப்., 30ல் நடந்தது. அன்றைய தினம் 1000 துணை நடிகர்கள் இருந்தார்கள். 4 நாட்கள் உங்களுக்கு படப்பிடிப்பு இருந்தது. ஆனால் வேறு ஒரு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததால் நீங்கள் சென்றுவிட்டீர்கள். அதனால் அன்றைய தினம் படப்பிடிப்பு நின்றதோடு எனக்கு பெரும் நஷ்டமும் ஏற்பட்டது'' என தெரிவித்துள்ளார்.