கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் |

சமீப காலமாக தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உடன் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில் கடந்த ஆண்டில் சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் தான் வாங்கிய வீட்டில் குடியேறி இருக்கும் நயன்தாரா, அங்கு ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் பழங்கால பொருட்களும் வைக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னணியில் சிவப்பு நிறத்தில் பட்டுப் புடவை அணிந்து, தலையில் மல்லிகை பூச்சூடி, மங்களகரமாக இந்த போட்டோஷூட்டை நடத்தி இருக்கிறார் நயன்தாரா. அவர் அணிந்துள்ள இந்த புடவையை இயக்குனர் விஷ்ணுவர்தனின் மனைவி அனு என்பவர் தான் வடிவமைத்திருக்கிறார்.
அவர் நடத்திவரும் கைத்தறி ஆடை விற்பனை நிலையத்துக்கு புரமோஷன் செய்யவே இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சோஷியல் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது. மேலும் தற்போது மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அடுத்தபடியாக சுந்தர்.சி இயக்கும் மூக்குத்தி அம்மன்-2 படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.