ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகில் நடிகைகள் பலர் பாலியல் ரீதியாக சந்திக்கும் தொந்தரவுகள் குறித்து வெளிச்சம் போட்டி காட்டியது. இதைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ஒருவர், பிரபல குணசித்திர மற்றும் வில்லன் நடிகர் ஆன நடிகர் சித்திக் மீது திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கேரள நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் சில நாட்கள் தலைமறைவாக இருந்த சித்திக் உச்ச நீதிமன்றத்தை நாடி தன்னை கைது செய்வதற்கான இடைக்கால தடை உத்தரவை பெற்றார்.
அதேசமயம் உச்சநீதிமன்றம் போலீஸ் விசாரணைக்கு சித்திக் ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது சித்திக்கிடம் போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரித்து வருகின்றனர். இரண்டு நாட்களாக நடந்த இந்த விசாரணையின்போது பெரும்பாலும் சித்திக் எந்த கேள்வி கேட்டாலும் தனக்குத் தெரியாது அல்லது ஞாபகம் இல்லை என்பது போல திருப்பித் திருப்பி பதில்களை கூறி வருகிறாராம். இதனால் போலீசார் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறி அவரது ஜாமீனை ரத்து செய்து அவரை கைது செய்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள் என்று போலீசார் தரப்பில் செய்தி வெளியாகி உள்ளது.