மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

மாநகரம் என்ற படத்தில் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் அதன்பிறகு கைதி , மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களை இயக்கினார். தற்போது ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார் . அப்போது அவரிடத்தில், வெட்டு, குத்து, ரத்தம் இல்லாமல் காதல் கதையில் எப்போது படம் எடுப்பீர்கள்? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு...
அவர் பதில் அளிக்கையில், தற்போது நான் எடுக்கும் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருவதால் அதே கோணத்தில் யோசித்து வருகிறேன். கூலி படத்தை அடுத்து விக்ரம் படத்தில் இடம் பெற்ற ரோலக்ஸ் வேடத்தை இன்னும் பெரிய அளவுல டெவலப் பண்ணி ஒரு படம் எடுக்க போறேன். அதுக்கு அப்புறம் கைதி 2 எடுக்க போறேன். இது மாதிரி நான் கமிட் ஆயிருக்கிற படங்களை இயக்கி முடிப்பதற்கு இன்னும் 5 வருஷம் ஆயிடும். அதனால அதன்பிறகு ரொமான்ஸ் காதல் கதையில் படம் எடுப்பேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.