சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா கடந்த சில வருடங்களாக படம் இயக்குவதில் இருந்து பிரேக் எடுத்து கொண்டு பிஸியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
எஸ்.ஜே. சூர்யா தற்போது மலையாள மொழி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஏற்கனவே பஹத் பாசில் உடன் இணைந்து ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என அவரே ஒரு சில நேர்காணலில் தெரிவித்தார். இதன் மூலம் அவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து மலையாளத்தில் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் எஸ். ஜே. சூர்யா. அதன்படி, ஆர்.டி.எக்ஸ் படத்தின் இயக்குனர் நிகாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ள புதிய படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் துவங்கும் என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.