தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க 'வாடிவாசல்' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த 2021ம் வருடம் ஜூலை மாதம் 16ம் தேதி அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டார். சிசு செல்லப்பா எழுதிய நாவலை மையமாக வைத்து 'ஜல்லிக்கட்டு' பற்றிய படமாக அந்தப் படம் தயாராக உள்ளதாக சொல்லப்பட்டது. அதற்காக ஜல்லிக்கட்டு காளை ஒன்றையும் வாங்கி அதனுடன் பழகியும் வந்தார் சூர்யா. 2022ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அந்தக் காளையுடன் அவர் நடந்து சென்ற வீடியோவையும் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
அந்தப் படத்தின் அறிவிப்புக்குப் பிறகு சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புகளும், குழப்பங்களும் இருந்து வந்தன. தனக்கு திருப்புமுனை தந்த பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தைத் தயாரித்து நடிக்க ஆரம்பித்து முதல் கட்டப் படப்பிடிப்புடன் அவற்றிலிருந்து விலகினார் சூர்யா. அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்து பின் அந்தப் படத்தைத் தள்ளி வைக்கிறோம் என்றார்கள். அதன்பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடிக்க ஆரம்பித்து படத்தையும் முடித்துவிட்டார் சூர்யா.
இப்போது சூர்யாவின் 45வது படமாக ஆர்ஜே பாலாஜி இயக்க உள்ள படத்தில் நடிக்கப் போகிறார். அப்படி என்றால் 'வாடிவாசல்' படம் மேலும் தள்ளிப் போகும் என்பது சொல்லாமலேயே தெரிந்துவிடும். 'விடுதலை 2' படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் 'வாடிவாசல்' படத்தை ஆரம்பிப்பார் என்றும் சொன்னார்கள். அப்படம் முடிந்து டிசம்பர் மாதமும் வெளியாகப் போகிறது.
அதற்கடுத்து 'வாடிவாசல்' படத்தை இயக்க வெற்றிமாறன் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது பாலாஜி இயக்க உள்ள படத்திற்குப் போகிறார் சூர்யா. அதன் வேலைகள் முடிந்து அடுத்த ஆண்டு தீபாவளி சமயத்தில் வெளியாகலாம்.
எப்போது 'வாடிவாசல்' என்று பெயர் வைத்தார்களோ அதன் 'வாசல்' இன்னும் திறக்கப்படாமலேயே வாடிப் போய் உள்ளது.