'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

மலையாள திரையுலகில் நடிகர் மம்முட்டியின் மகனாக ஒரு வாரிசு நடிகராக அறிமுகமானாலும் தனது துள்ளலான நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் துல்கர் சல்மான். அதனால் மலையாளத்தையும் தாண்டி தன் தந்தையை போலவே தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியுள்ள துல்கர் சல்மான் ஒவ்வொரு மொழியிலும் சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வந்தார். ஆனால் கடந்த வருடம் மலையாளத்தில் அவர் நடித்த கிங் ஆப் கொத்த திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. சமீபத்தில் வெளியான கல்கி திரைப்படத்தில் கூட ஒரு சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார் துல்கர் சல்மான்.
அவர் தமிழில் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் கூட முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவும் இல்லை. இது திரையுலகில் மட்டுமல்ல ரசிகர்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் எதனால் இந்த இடைவெளி என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.
“படங்களில் நடிப்பதிலேயே கவனத்தை செலுத்தியதால் என் உடல் நிலையில் கொஞ்சம் அக்கறை காட்ட தவறிவிட்டேன். சில உடல் நல குறைபாடுகள் காரணமாகத்தான் நடிப்பதற்கு தற்காலிக இடைவெளி விட்டுள்ளேன். இது யாருடைய தவறும் அல்ல. எனக்கு ஒரு சிறிய இடைவெளி தேவைப்பட்டது. அவ்வளவுதான்” என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.